ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன் மஹ்மூத் அஹ்மத் (ரலி) அவர்களின் பிறப்பும்- ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் முன்னறிவிப்பும்
ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) அவர்கள் சிறு வயதிலேயே
குர்ஆன் படிப்பதிலும், தொழுகையிலும், திக்ரிலும் முழுமையாக ஈடுபாடு உடையவர்களாக விளங்கினார்கள். ஆனால் அவர்கள்
திக்ர் என்ற பெயரால்
பள்ளியிலேயே உட்கார்ந்திருக்கவில்லை. இஸ்லாம் நாலாப்புறத்திலிருந்து
தாக்குதலுக்கு ஆளானபோது குர்ஆனின் உதவியைக்கொண்டு அந்த தாக்குதல்களை முறியடித்தார்கள். இவ்வாறு
இஸ்லாத்தின் வீரராகக் கருதப்பட்ட
அவர்கள், தான் எழுதிய பாராஹீனே அஹ்மதிய்யா
என்ற நூலின்
மூலம் முழு உலகிலும் பிரபலம்
அடைந்தார்கள். இப்படியிருக்க
தனது 40 -ஆவது
வயதிலிருந்து தொடர்ந்து வஹீ வந்து கொண்டேயிருந்தது.
மேலும்
அன்னார் ஈஸா நபி இறந்து விட்டார்கள்
என்றும் அவர்களது கல்லறை
காஷ்மீரில் உள்ள Khanyar வீதியில்
உள்ளது என்றும் அறிவித்தார்கள். அதனால் அவர்களுக்கு
பலத்த எதிர்ப்பு
கிளம்பியது. உலகம் அன்னாரை ஏளனம் செய்யவும் இகழவும்
செய்தது. நீர் நபி என்று வாதிக்கிறீர் என்றால்
அதற்கான அடையாளத்தைக் காட்டுங்கள்
என்று கூச்சலிட்டர்கள்.
குறிப்பாக அப்போது காதியானில்
வசித்து வந்த ஆரிய சமாஜ் மதத்தவர்கள்
அன்னாரை அதிகமாக எதிர்த்தது
மட்டுமல்லாமல் இஸ்லாதையும் அதன் ஸ்தாபகர் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும்
இழிவாக ஏசி பேசி ஆட்சேபனை
செய்து வந்தார்கள். அப்போது அவர்கள்
இறைவனிடம், இஸ்லாத்தின்
உண்மைக்காகவும், ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்கள் உண்மையாளர்
என்பதை நிரூபிப்பதற்காகவும், தான் அன்னாரின்
அடியாராக முழு மதத்தையும்
ஒன்றிணைப்பதற்காக இறைவன் புறமிருந்து
வந்த நல்லடியார்
என்பதை நிரூபிப்பதற்காகவும்
இறைவனிடம் அதிகமாக முறையிட்டார்கள். அதன் காரணமாக
உலக தொடர்பிலிருந்து
விடுபட்டு இறை நெருக்கத்தை
ஏற்படுத்த எண்ணினார்கள்.
இதனடிபடையில்
இறைவனின் கட்டளைக்கேற்ப அவர்கள் ஹோஷ்யார்பூர்
சென்று அங்கு 40 நாட்கள் துஆவிலும்
தொழுகையிலும் நோன்பிலும் ஈடுபட்டார்கள். தனக்கு ஓர் அடையாளம் காட்டுவதற்காக
இறைவனிடம் மன்றாடினார்கள். இறுதியில்
அல்லாஹ் அவர்களுக்கு
மாபெரும் ஓர் அடையாளத்தை
காட்டினான். அது ஒரு மாபெரும்
முன்னறிவிப்பாகும். அந்த முன்னறிவிப்பு
தனக்குப் பிறக்கப் போகும் மகனை பற்றியதாக
இருந்தது. அதாவது ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்கள் 1886 -ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம்
தேதி இறைவன் புறமிருந்த பெற்ற செய்தியின் படி தமக்கு ஒரு மகத்துவம் மிக்க மகன் பிறக்கப்போவதாக
முன்னறிவிப்பு செய்தார்கள்.
அந்த முன்னறிவிப்பின் விபரம்:
“நீர் என்னிடம் கேட்டதற்கிணங்க நான்
அருளின் ஓர் அடையாளத்தை உமக்குத் தருகின்றேன். நான் உமது மன்றாடல்களை
செவியுற்றேன். மேலும் நான் என் அருள்களால் உமது துஆக்களை ஏற்றுக் கொண்டேன்.
(லூதியானா, ஹோஷியார்பூரை நோக்கி நீர் மேற்கொண்ட) உமது பயணத்தை உமக்கு
அருளுக்குரியதாக ஆக்கினேன். எனவே ஆற்றல், அருள், இறை நெருக்கம் ஆகிய அடையாளங்கள் உமக்கு அளிக்கப்படுகின்றன. அருள், பேரருள் ஆகிய வெற்றி வாகையின் திறவுகோல் உமக்கு கிடைக்கிறது. வெற்றி
பெற்றவரே! உம்மீது சாந்தி உண்டாவதாக. வாழ்க்கையை விரும்புபவர்கள் மரணத்தின்
பிடியிலிருந்து தப்பிப்பதற்காகவும், கல்லறைகளில் புதைந்து
கிடப்பவர்கள் வெளியில் வருவதற்காகவும் இறைவன் இதை கூறியிருக்கிறான். மேலும்
இஸ்லாம் மார்க்கத்தின் சிறப்பு, அல்லாஹ்வுடைய வார்த்தையின்
அந்தஸ்து மக்களுக்கு வெளிப்படுவதற்காகவும், உண்மை தனது எல்லா
அருள்களுடனும் வந்துவிடுவதற்காகவும், பொய் தனது அனைத்து தீய
சகுனங்களுடனும் வெருண்டோடி விடுவதற்காகவும் இறைவன் இதைக் கூறியுள்ளான்.
மேலும் நான் ஆற்றல் மிக்கவன் எனவும்,
விரும்புவதை செய்கின்றேன் எனவும் மக்கள் புரிந்து கொள்ளட்டும். நான் உம்முடன்
இருக்கிறேன் என அவர்கள் உம்முடன் இருக்கிறேன் என அவர்கள் உறுதி கொள்ளட்டும்.
மேலும் எவர்கள் இறைவனுடைய இருப்பு பற்றி நம்பிக்கை கொள்வதில்லையோ, மேலும் இறைவனுடைய மார்க்கத்தையும், அவனுடைய
வேதத்தையும் அவனுடைய தூய தூதர் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களையும் மறுத்தல்
மற்றும் பொய்படுத்துதல் என்ற பார்வையுடனும் பார்க்கிறார்களோ அவர்களுக்கு ஓர்
அடையாளம் கிடைக்க வேண்டும் என்பதற்காவும், குற்றவாளிகளின்
வழியை வெளிப்படுத்துவதற்காகவும் இறைவன் இதைக் கூறியுள்ளான்.
எனவே உமக்கு ஒரு நற்செய்தி! கம்பீரமான
தூய ஒரு மகன் உமக்கு வழங்கப்படுகிறது. ஒரு தூய குழந்தை உமக்குக் கிடைப்பார். அந்த
மகன் உமது வித்திலிருந்தே உமது சந்ததி, வழித் தோன்றலாக இருப்பார். அழகிய, தூய மகன் உமது விருந்தினர் வருகிறார். அவரது பெயர் இம்மானுவேல் மற்றும்
பஷீர் என்பதுமாகும். அவருக்கு பரிசுத்த ஆவி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர்
அசுத்தத்திலிருந்து தூயவராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் ஒளியாவார்.
வானத்திலிருந்து வரும் அவர் அருளுக்குரியவராக இருக்கிறார். அவருடன் அருள்
இருக்கிறது.அது அவர் வரும்போது உடன் வரும்.
அவர் கண்ணியத்திற்குரியவராகவும்,
மகத்துவம் கொண்டவராகவும், செல்வம் உடையவராகவும் இருப்பார்.
அவர் உலகில் வருவார். மேலும் தமது மஸீஹின் ஆவியினாலும் உண்மையின் ஆவியின்
அருளினாலும் அதிகமானோரை நோயிலிருந்து தூய்மைப்படுத்துவார். அவர் அல்லாஹ்வின்
வார்த்தையாவார். ஏனெனில் இறைவனுடைய கருணையும், தன்மானமும்
அவரை கண்ணியத்திற்குரிய வார்த்தையுடன் அனுப்பியிருக்கிறது.
அவர் மிகவும் புத்திக் கூர்மை
உள்ளவராகவும், நுண்ணிய அறிவுடையவராகவும் இருப்பார். மேலும் உள்ளத்தால்
சகிப்புத்தன்மை கொண்டவராகவும் இருப்பார். மேலும்,
வெளிப்புறமான, உட்புறமான ஞானங்களால் அவர் நிரப்பப்படுவார். மேலும்
அவர் மூன்றை நான்காக்குபவராக இருப்பார். (இதன் பொருள் புரியவில்லை)
திங்கள் கிழமை, வாழ்த்துக்குரிய
திங்கள் கிழமை. அவர் ஆரம்பம், முடிவின்
தோற்றமாகவும், உண்மை, உயர்வின் தோற்றமாகவும்
இருக்கிறார். அல்லாஹ் வானிலிருந்து இறங்கி வந்தது போன்றிருக்கும். அவருடைய வருகை மிகவும்
அருளுக்குரியதாகவும், இறை கம்பீரத்தை வெளிப்படுத்துவதற்குக் கரணமாகவும்
அமையும். இறைவன் தன் திருப்தி எனும் நறுமணத்தால் மணம் கமழ வைத்த ஒளி வருகிறார். நாம்
அவரிடத்தில் தமது ஆவியை ஊதுவோம். இறைவனின் நிழல் அவர் தலைமீது இருக்கும். அவர் மிக
விரைவில் முன்னேறுவார். கைதிகளை விடுவிப்பதற்குக் காரணமாகத் திகழ்வார். மேலும் பூமியின்
எல்லைகள் வரை புகழ் பெற்று விளங்குவார். சமுதாயங்கள் அவரிடமிருந்து அருள்களைப் பெற்றுக்
கொள்ளும். பின்னர் அவர் வானத்தின் பக்கம் உயர்த்தப்படுவார். வ கான அம்ரம் மக்ழிய்யா.
(இது தீர்மானிக்கப்பட்டு விட்ட ஒன்றாகும்)”. (ஆதாரம் : மஜ்மூஆ இஷ்திஹாராத் தொகுதி 1
பக்கம் 100 )
தமக்குப் பிறக்கப்போகும்
மகனின் குணநலங்களைப்
பற்றி பிறக்கும்
முன்னரே நற்செய்தி
கூறி 'சப்ஸ் இஷ்திஹார்'. (பச்சை பிரசுரம்) என்னும் பிரசுரம்
வெளியிட்டார்கள்.
இவ்வாறு
தனக்குப் பிறக்கப் போகும் மகனைப் பற்றி முன்னறிவித்தபோது வழக்கமாக எல்லா ஆலிம்களும் அன்னாரை
கேலி செய்தார்கள். மிகவும் சிறிய கிராமத்தில் வாழ்ந்துவரும்
ஒருவர் தன்னுடைய
மகன், உலகில் அறியப்படும் அளவில் தலைவராக வருவார்
என்றும் அவர் உலக மற்றும் ஆத்மீக ஞானம் மிக்கவராக
விளங்குவார் என்றும் முன்னறிவிப்பது
சாத்தியமானதா என்பது சிந்திக்கக்கூடிய
ஒன்றாகும்.
இந்த இறை முன்னறிவிப்பை
அடுத்து, அன்னாருக்கு
ஒரு பெண் குழந்தைப் பிறந்தது, குழந்தையாக இருக்கும்போதே
அது இறந்துவிட்டது. தொடர்ந்து ஓர் ஆண் குழந்தைப்
பிறந்தது. அந்த குழந்தைக்கு பஷீர் என பெயரிடப்பட்டது. அந்தக் குழந்தையும்
இறந்துவிட்டது. இதை அறிந்த ஆலிம்களும்
ஏனைய எல்லா எதிரிகளும் அஹ்மத் (அலை) அவர்களை
ஏளனம் செய்தார்கள். அவர் பொய்யர்
என்றும் ஏமாற்றுக்காரர் என்றெல்லாம் அன்னாரை
வசை பாடினார்கள்.
அப்போது
மிகவும் பொறுமையுடன் அஹ்மத் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள். அதாவது நான் இறைவனால் அனுப்பட்ட
நபியாவேன், எனவே நான் உண்மையாளன்
என்றால் இறைவன் வாக்குறுதியளித்தபடி
அந்த மகன் பிறப்பான் என்று சத்தியம் செய்து கூறினார்கள். அதனடிப்படையில், முன்னறிவிப்பு
வெளியிட்டு இரண்டு வருடங்கள்
கழித்து 1889 -ஆம்
ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி அஹ்மத் (அலை) அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை
பிறந்தது. நற்செய்தியின்
படி அந்த குழந்தைக்கு பஷீருத்தீன்
மஹ்மூத் அஹ்மத் என்று பெயரிட்டார்கள்.
மகன் பிறப்பார் என்ற நற்செய்தி கிடைத்த
பின்னர் தனக்குப் பிறந்த இரண்டு மக்களும்
இறந்து விடுகிறார்கள்; அது மட்டுமல்ல
உலகமே அவர்களுடைய
அந்த முன்னறிவிப்பு
பொய்த்து விட்டது என்றும், எனவே அவர் பொய்யர் தான் என்றெல்லாம் அன்னாரை
இகழ்ந்தார்கள். அப்போதும்
அவர்களின் இறை நம்பிக்கை
சற்றும் தளரவில்லை. அவர்கள்
இறைவன் அறிவித்த
முன்னறிவிப்பில் மிகவும் உறுதியாக
இருந்தார்கள் என்பது அன்னாரின்
அசாதாரண நம்பிக்கையை எடுத்துக்
காட்டுகிறது.
முன்னறிவித்தபடியே
மகனுடைய வாழ்க்கை மிகவும்
அசாதாரணமாக
விளங்கியது. சிறு வயதிலேயே அவர் நேர்மையாகவும், தூய்மையாகவும்
விளங்கினார்கள். தொழுகையிலும், ஏனைய வணக்க வழிபாட்டிலும் அதிகமாக தன்னை அர்ப்பணித்தார்கள். குர்ஆனைப் படிப்பதிலும் புரிவதிலும்
மிகவும் ஆர்வம் காட்டினார்கள். இந்த மகன் தான் பின்னர்
அஹ்மத் (அலை) அவர்களுக்குப் 2 -ஆம்
கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபத்துல் மஸீஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
“உதயமாகும்
ஒவ்வொரு நாளிலும் எனது வெற்றிக்கான வழிவகைகள்
கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. சூரியன் மறையும் ஒவ்வொரு நாளிலும் எனது எதிரிகளின் வீழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அல்லாஹ் என் மூலம் அஹ்மதிய்யா
ஜமாஅத்தை
உலகெங்கும் பரவச்செய்தான். ஒவ்வொரு காலடி வைப்பதிலும் அல்லாஹ்
எனக்கு வழி காட்டித் தந்தான். பின்னர் ஒரு நாள் மஸீஹ் மவ்வூதுக்கு (வாக்களிக்கப்பட்ட மஸீஹுக்கு) நற்செய்தி கூறப்பட்ட மகன் நீரே என்று எனக்கு வெளிப்படுத்திக் காட்டினான். அன்றிலிருந்து அல்லாஹ்வின் உதவி எனக்கு கிடைத்துக்கொண்டே இருந்தது . இன்று உலகின் எல்லா கண்டங்களிலும் அஹ்மதிய்யா
இயக்க
பிரச்சாரகர்கள் இஸ்லாத்தின் ஆன்மீகப் போரை நடத்தி வருகிறார்கள்.
மூடிக்கிடந்த வேதமாக
முஸ்லிம்களின் கரங்களில் தவழ்ந்து கொண்டிருந்த திருக்குர்ஆன், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
அருளாலும், அஹ்மத் (அலை)அவர்களின் அருளாலும் நமக்கு ஒரு திறந்த புத்தகமாக மாறிவிட்டது. அதிலிருந்து புதுப்புது அறிவுகளும் ஞானங்களும் வெளிப்பட்டுக்கொண்டே இருந்தன. இஸ்லாத்திற்கு எதிராக எழுப்பப்படும் ஒவ்வோர்
ஓசைக்கும் பதிலை இறைவன் எனக்கு திருக்குர்ஆனிலிருந்து கற்றுத் தந்தான். இவ்வாறு குர்ஆனின் ஆட்சிக் கொடி மேலோங்கச் செய்யப்படுகின்றது. அல்லாஹ்வின் வசனங்களிலும் இல்ஹாம்களிலும் உறுதியும் நம்பிக்கையும் கொண்டு நாங்கள் குர்ஆனின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டி வருகிறோம். நபி (ஸல்) அவர்களுடைய இஸ்லாத்தின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. உலகில் திருக்குர்ஆனின் ஆட்சி நிலைநாட்டப்படுகின்றது. உலகம் தனது கைகளால் உருவாக்கிய சிலைகளையும், மனிதர்களையும் வணங்குவதை விட்டுவிட்டு விலகி ஏக இறைவனை மட்டும் வணங்கும் காலம் அண்மையில் வரப்போகிறது.” [Introduction to the study of holy Quran Page
499, 500]
வாக்களிக்கப்பட்ட
மகனாகிய ஹஸ்ரத் பஷிருத்தீன்
மஹமூத் அஹ்மத் அவர்கள் மே 14,
1914 அன்று அஹ்மதிய்யா
ஜமாஅத்தின் இரண்டாவது கலிஃபாவாக
தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
அப்போது
அவர்களுக்கு 25 வயது. இவ்வாறு சிறு வயதிலேயே கலிஃபாவாக
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதன் மூலம் ஹஜ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுடைய
முன்னறிவிப்பு நிறை வேறியிருப்பது
ஹஸ்ரத் அஹ்மத் –அலை- அவர்கள்
உண்மையாளர் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்றாகும். அவர்களுடைய
காலத்தில் அஹமதிய்யா ஜமாஅத் 50 -க்கும் மேற்பட்ட
நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதற்குக்
காரணமே இந்த ஜமாஅத்தை சார்ந்த
ஒவ்வொருவரும் கல்வி அறிவில்
முதன்மையாக விளங்க வேண்டும்
என்பதற்காக அவர்கள் தொலைநோக்கத்துடன்
நஸாரத்
தாவத்தோ தப்லீக் (Nazaarath Davath – o –Thableeg) என்ற அமைப்பை 1919 -ல் நிறுவியதாகும். ஜமாத்தில் இளைஞர் அணி, முதியோர்
அணி , மாதர் அணி, சிறுவர்
அணி என தனித்தனி அமைப்புகளை
நிறுவி ஜமாஅத்தின்
வளர்ச்சியை ஊக்கப்படுத்தினார்கள். 1934 –ல்
தஹ்ரீகே ஜதீது (Tahreek e Jadid) என்ற திட்டத்தை
கொண்டு வந்தார்கள். இந்த திட்டத்தின்
மூலம் ஜமாஅத் உலகில் பல நாடுகளிலும் மிக வேகமாக பரவியது. இஸ்லாத்தின் பிரச்சார
பணிக்கான அனைத்து வழியையும்
இத்திட்டத்தின் மூலம் வகுக்கப்பட்டன. மேலும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின்
தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக 1957 -ஆம்
ஆண்டு வக்ஃபே ஜதீது (Wakf e
Jadeed) என்ற திட்டத்தை ஏற்படுத்தினார்கள். இந்த அருளுக்குரிய
திட்டங்கள் யாவும் ஜமாஅத்தில் நிரந்தரமான ஒரு பகுதியாக ஆகிவிட்டது.
1924 -ல் அவர்கள் லண்டன் சுற்றுப்பயணம் (10 பேருடன்) மேற்கொண்டார்கள். அங்கிருந்து
தொடர்ந்து damascus, பாலஸ்தீனம், எகிப்து, இத்தாலி, ஃபிரான்ஸ்
போன்ற நாடுகளுக்கும்
சுற்றுப்பயணம் மேற்கொண்டார்கள். அன்னாரின்
வருகையையொட்டி 1924 செப்டம்பர் 23 -ல் Wembley -ல்
சர்வ சமய மாநாடு (Conference of Living Religions) நடத்ததப்பட்டது. அப்போது வாக்களிக்கப்பட்ட
மகன் (Mirza Basheerudeen Mahmood Ahmad) அவர்களால் ‘Ahmadiyyath
- The True Islam’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட
கட்டுரை, Chowdary Mohamed Zafarullah Khan sahib (Chief
President of International Court of Justice) அவர்களால் அந்த மாநாட்டில் படிக்கப்பட்டது. இந்த கட்டுரை
இஸ்லாத்தின் உண்மையான போதனைகளையும்
வாக்களிக்கப்பட்ட மஸீஹின் நோக்கத்தைப்
பற்றியும் எழுதப்பட்டதாகும். இந்த கட்டுரை நாடெங்கும்
பிரசித்தி பெற்றது.
The Manchester Gaurdian என்ற பத்திரிகை அன்னாரைப்
பற்றி மிகவும்
புகழ்ந்து எழுதியது. இந்த மாநாட்டின் அமைப்பாளராக
இருந்த Dr. Walter Watch அவரும் இந்த கட்டுரையை மிகவும்
பாராட்டினார். பின்னர்
ஹுஸூர் அவர்கள் 1924 -ல் லண்டன் -ல் மஸ்ஜிதுக்கான
அடிக்கல் நாட்டினார்கள். அதற்கு மஸ்ஜித் ஃபஸ்ல் என்று பெயரிட்டார்கள். இந்த மஸ்ஜித்
இலண்டனில் கட்டப்பட்ட முதல் மஸ்ஜித் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. Huzur அவர்கள் பள்ளிக்கூடப்
படிப்பையே முடிக்காமல் இருந்தாலும்
அவர்களுடைய பேச்சாற்றலும் அறிவும் அபரிமிதமாக விளங்கியது. திருக்குர்ஆனின்
மீது அவர்கள்
கொண்ட நேசம்தான்
அவர்களின் அபரிமிதமான அறிவிற்கு
காரணம்.
திருக்குர்ஆனின்
விளக்க உரையாக தஃப்சஸீர் ஸகீர் மற்றும் 5 volume களைக்
கொண்ட தஃப்சஸீர் கபீர் எழுதி வெளியிட்டது முழு மனித இனத்திற்கும்
செய்த மிகப் பெரிய சேவையாகும். அவர்களுடைய
குர்ஆன் விளக்க உரை எதிரிகளாலும் பாராட்டப்பட்டுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு டச்சு தினசரி பத்திரிகையான ‘Dewaagsohel’ இவ்வாறு எழுதுகிறது. அதாவது மிர்ஸா பஷீருத்தீன்
மஹ்மூத் அஹ்மத் அவர்கள்
குர்ஆன் தப்ஸீரருக்காக எழுதிய முகவுரையே
பைபிள் மற்றும்
வேதங்களின் போதனைகளை விட மிக மேலானதாக
விளங்குகிறது.
ஒரு சொற்பொழிவில் ஜமாஅத்தின்
எதிரியான, அப்போதைய
முஸ்லிம்களின் தலைவராக விளங்கிய
மவ்லவி ஸஃபர் அலி கான் கூறினார், "நன்றாகக்
கேளுங்கள். நீங்களோ
உங்களைப் பின்பற்றுபவர்களோ, மிர்ஸா மஹ்மூத்
அவர்களுடன் ஒருபோதும் போட்டி போட முடியாது. மிர்ஸா மஹ்மூதிடம் குர்ஆன்
இருக்கிறது, எனவே அவரிடம் அறிவும்
ஞானமும் இருக்கிறது. ஆனால் உங்களிடம் என்ன இருக்கிறது?" (எக்
கவ்னாக் ஸாஸிஷ் பக்கம்
196)
ஹுஸூர் அவர்களிடம் வெளிப்பட்ட
அறிவு மற்றும்
ஆற்றல், அவர்கள்
வாக்களிக்கப்பட்ட மகன் தான் என்பதை எடுத்துக்காட்டியது. ஆனால் ஜமாஅத்தின்
பல சகோதரர்கள்
பல முறை அவர்களிடம், வாக்களிக்கப்பட்ட
மகன் தாங்கள்
தான் என்று ஏன் கூறமாட்டீர்கள்
என்று கேட்டபோது
அவர்கள் பதில் கூற மறுத்து விட்டார்கள். அந்த அளவுக்கு
அவர்கள் பணிவுடையவர்களாக விளங்கினார்கள். ஆனால் இறைவனால் அறிவித்த
பிறகே, அதாவது 1944 -ல் இறைவன் என்னை “வாக்களிக்கப்பட்ட மகன்” என்று அறிவித்ததாக மிர்ஸா மஹ்மூத்
அஹ்மத் அவர்கள்
தெரிவித்தார்கள். அதாவது ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களுக்கு
பல அடையாளங்களுடன்
ஒரு மகன் பிறப்பான் என்று பல வருடங்களுக்கு
முன்னரே அல்லாஹ் அறிவித்த
நற்செய்தி என் மூலம் நிறைவேறியது என்று ஹுஸூர் அவர்கள்
அறிவித்தார்கள். அதன் பிறகு அவர்கள்
நாட்டின் பல பகுதிகளுக்கும்
சென்று ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களால் முன்னறிக்கப்பட்ட ‘’வாக்களிக்கப்பட்ட மகன்’’ நான் தான் என இறைவன் அறிவித்ததாக
எடுத்துரைத்தார்கள்.
இவர்கள்
இஸ்லாத்திற்காகவும், மனிதகுல மேம்பாட்டிற்காகவும் செய்த பணிகள் ஏராளம்…. வாக்களிக்கப்பட்ட மகனாகிய மிர்ஸா மஹ்மூத்
அஹ்மத் அவர்கள்
காஷ்மீர் விடுதலைக்காக பாடுபட்டார்கள். முதன் முதலாக ‘’அகில இந்திய காஷ்மீர் கமிட்டி’’ (1931
ஜூலை 25) அமைக்கப்பட்டு
அதன் தலைவராக
மிர்ஸா மஹ்மூத் அஹ்மத் அவர்கள் தலைவராக
தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சர் சுல்ஃபிக்கர்
அலி கான், டாக்டர் சர் முஹம்மத் இக்பால், காஜா ஹஸன் நிஸாமி தஹ்லவி ஆகியோர்கள் இந்த கமிட்டியின் முக்கிய
உறுப்பினர்கள் ஆவர். காஷ்மீர்
விடுதலைக்காகவும் காஷ்மீர் முஸ்ளும்களுடைய
அடிப்படை உரிமையை பாதுகாப்பதற்காகவும்
இந்த கம்மிட்டி
உருவாக்கப்பட்டது.
ஒரு புறம் முஸ்லிம்
ஆலிம்கள் அஹ்மதிய்யா ஜமாஅத்தை எதிர்த்து கிளர்ச்சி
செய்து கொண்டிருந்தார்கள். மறுபுறம் காஷ்மீர்
விடுதலை இயக்கத்திற்கு தலைவராக அன்னாரை
தேர்ந்த்தெடுத்தார்கள். இது ஹுஸூர் அவர்களுக்கு பொது மக்கள் மீது இருந்த சேவை மனப்பான்மையை எடுத்துக் காட்டுகிறது. மேலும் தன் மகனை பற்றி ‘’அவர் கைதிகளை விடுவிப்பார்’’ என்ற அஹ்மத் (அலை) அவர்களின் முன்னறிவிப்பும்
நிறைவேறியது.
‘சியாசத்’ என்ற தினப் பத்திரிக்கை (1933 மே
மாதம் 18) இவ்வாறு
எழுதுகிறது: காஷ்மீரின்
நிலை மிகவும்
மோசமாக இருந்தது. அந்த நேரத்தில்
கொள்கை வேறுபாடுகள்
இருந்த போதும் மிர்ஸா மஹ்மூத் அஹ்மத் சாஹிபை தலைவராக்கியது
சரியான தேர்வாக
அமைந்தது. அவர்கள்
மிர்ஸா சாஹிபை (மிர்சா மஹ்மூத்
அஹ்மத்) தேர்ந்தெடுக்கவில்லை
என்றால் இந்த இயக்கம்
மிகப்பெரும் தோல்வியில் முடிந்திருக்கும், அது மட்டுமல்லாமல்
முஸ்லிம்களுக்கு மாபெரும் இழப்பும்
ஏற்பட்டிருக்கும்’’.
ஹுஸூர் அவர்கள் பாகிஸ்தானின்
தலைமை பொறுப்பை
ஏற்க முஹம்மத்
அலி ஜின்னாஹ்
அவர்களுக்கு லண்டனில் இருந்து
திரும்ப வருமாறு அழைப்பு
விடுத்தார்கள். சுருக்கமாக
காஷ்மீர் விடுதலைக்கும், பாகிஸ்தான்
சுமூகமாக உருவாவதற்கும் ஹுஸூர் அவர்கள்
மிகவும் பாடுபட்டார்கள்.
அடுத்து
வாக்களிக்கப்பட்ட மகனைப் பற்றிய முன்னறிவிப்பில், மிர்ஸா மஹ்மூத்
அவர்கள் ‘மூன்றை நான்காக்கக்குவார்’ என்பதும் ஒன்றாகும். இதுவும் அவர்கள்
மூலம் நிறைவேறியது. அதாவது பாகிஸ்தானில்
தரிசு நிலமாக கிடந்த இடத்தை வங்கி அங்கே ஓர் அழகிய நகரத்தை முதலிலிருந்தே
உருவாக்கினார்கள். அதற்கு Rabwa என்று
பெயரிட்டார்கள். அந்த நகரம் இன்று வரையிலும் தூய்மையான
நகரமாகவும், பாகிஸ்தானிலே
ஒழுக்கத்தில் மிகச் சிறந்த நகரமாகவும், கல்வியிலும்
முதன்மை இடத்தை வகிக்கும்
நகரமாகவும், பொதுச்சேவையிலும்
முதன்மை இடத்தை வகிக்கும்
நகரமாகவும் விளங்குகிறது. புனிதஸ்தலமாக
கருதப்படும் மக்கா, மதீனா, காதியான், ஆகிய மூன்று இடங்களுக்கு
அடுத்தபடியாக நான்காவதாக Rabwa உருவாக்கப்பட்டதிலிருந்து
‘’மூன்றை நான்கு ஆக்குவார்’’ என்ற முன்னறிவிப்பும்
நிறைவேறிவிட்டது.
1947 -ல் இந்தியா பாகிஸ்தான்
பிரிவினையின் போது பல்லாயிரக்கணக்கான
உயிரிழப்பு ஏற்பட்ட போதும் ஹுஸூர் அவர்களுடைய
முயற்சியில் காதியான் மட்டுமே
பாதுகாக்கப்பட்டது. அஹ்மதி அல்லாத ஒரு ஆலிம் மௌலவி ஷாமிவுல்லாஹ்
கான் ஃபாருக்கி (Shamiullah
Khan sahab Farooqui) அவர்கள்
எழுதுகிறார்கள்: வாக்களிக்கப்பட்ட
மஸீஹ் அஹ்மத் (அலை) அவர்களுக்கு
அல்லாஹ் இவ்வாறு வாக்களித்திருந்தான். அதாவது, ‘’நான் உமது ஜமாஅத்தை உனது மகனைக் கொண்டு நிலை நாட்டுவேன். மேலும் அவருக்கு என் நெருக்கத்தை வழங்குவேன். மேலும் நான் வஹீ மூலமாக அவருடைய
உண்மையை நிலை நாட்டுவேன். ஏராளமான மக்கள் உம்மை அவர்கள்
மூலம் ஏற்றுக்கொள்வார்கள்." இந்த முன்னறிவிப்பு
மிர்ஸா மஹ்முது (mirza
mahmood) அவர்கள்
மூலம் நிறைவேறி
விட்டது. முதல் கலீஃபாவின் மரணத்திற்கு
பிறகு இரண்டாவது
கலலீஃபா தேர்ந்தெடுக்கும்
நேரத்தில் மௌலவி முஹம்மத்
அலி உட்பட பெரியோர்கள் பலர் இருந்தும், மிர்ஸா பஷீருத்தீன்
மஹ்மூத் அஹ்மத் அவர்கள்
கலலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மேலும் அவர்கள்
கலலீஃபா ஆன பிறகு 1931 வரை
கணக்கு எடுத்தால்
அதற்கு முன்னர்
உள்ள அஹ்மதிகளின்
எண்ணிக்கையை விட 3 மடங்கு அதிகமாகி விட்டது. மேலும் அன்னாரின்
காலத்தில் உலகின் எல்லா இடங்களிலும் அஹ்மதிகள்
பரவி விட்டார்கள். இதிலிருந்து அஹ்மத் (அலை) அவர்களுடைய
முன்னறிவிப்பு சரியாகவே நிறைவேறி
விட்டது. (Tract Izharul haq பேஜ் 16, 17)
இன்னும்
ஏராளமான சாதனைகளை சொல்லலாம். மேலும் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களின் முன்னறிவவிப்பு பல கோணங்களிலலும், பல அர்த்தத்திலும் நிறைவேறியுள்ளது.
சுருக்கமாக
அஹ்மத் (அலை) அவர்களால் முன்னறிவிக்கப்பட்டபடி, தன் மகனாகிய
ஹஸ்ரத் மிர்ஸா பஷீருத்தீன்
மஹ்மூத் அஹ்மத் அவர்கள்
இரண்டாம் கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 51 வருடங்கள் கலீஃபா பொறுப்பிலிருந்து ஆற்றிய சேவைகள்
மனித அறிவால்
எடைபோட முடியாததாகும். எனவே இந்த முன்னறிவவிப்பு, அதுவும்
இறைவன் பெயரால்
அறிவிக்கப்பட்ட முன்னறிவிப்பு நிறைவேறியிருப்பது அஹ்மத் (அலை) அவர்கள் உண்மையாளர்கள்
என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும். ஃபல்ஹம்துலில்லாஹஹி அலா தாலிக்.
அருமையான பதிவு. அன்னாருக்கு வந்த அந்த வஹியில் உள்ள அரபு சொற்களையும் பதிந்து இருந்தால் நன்றாக இருக்கும் உதாரணமாக: மல்ஹருல் அவ்வலி வல் ஆஹிர்.
ReplyDelete2) சமூக ஊடகங்களை பயன்படுத்துவது பற்றி காலத்தின் கலீஃபாவின் வழிகாட்டுதலின் ஒளியில்
ReplyDelete