நபிமார்களின் கூற்று பொய்யாகாது, பொய் கூற்றை கூறுபவர் நபியாக மாட்டார்

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களுக்கு அவர்கள் உண்மையாளர், இறைவன் புறமிருந்து வந்தவர் என்பதை மக்கள் மத்தியில் உண்மை படுத்தும் வகையில் பல்வேறு வகையான அடையாளங்களை அல்லாஹ் வெளிப்படுத்தியிருக்கிறான். அதில் ஒன்றை நாம் கீழே தருகிறோம்.

ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:
" மௌலவி ஹக்கீம் நூருத்தீன் சாஹிபுக்கு எனது துவாவின் மூலம்  ஒரு மகன் பிறப்பான் என்றும் அந்த  மகன் துவாவினால் தான் பிறந்தான்  என்பதை உறுதி செய்யும் பொருட்டு அவன் உடலில் கட்டிகள் தோன்றுமென்றும் இறைவன் எனக்கு அறிவித்திருந்தான் .

பின்னர் அவ்வாறே நிகழ்ந்தது .அதாவது சிறிது காலத்திற்கு பின் மௌலவி சாஹிபு வீட்டில் ஒரு மகன் பிறந்தான் . அவனுக்கு அப்துல் ஹை எனப் பெயர் சூட்டப்பட்டது .அவன் பிறந்து சிறிது காலத்தில்  அவனது உடலில் கட்டிகள் தோன்றின  அதன் அடையாளத்தை இப்பொழுது கூட அவன் உடலில் காணலாம் .

தற்செயலாக நிகழ்ந்தது என்றோ ,துவாவினால் அல்ல என்றோ யாரும் எண்ணி விடக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ் இந்த கட்டிகளை தோன்றச் செய்துள்ளான் . இப்படிப்பட்ட ஆயிரக்கணக்கான எடுத்துக் காட்டுகள்  உள்ளன.
சிறு சிறு நிகழ்ச்சிகளைக்  கொண்ட ஆடிரக்கணக்கான முன்னறிவிப்புகள் ஒருவரால் செய்யப்பட்டு அவை நிறைவேறியிருப்பதுடன், நான் இறைவனால் அனுப்பப்பட்டவர் என அவர் வாதித்தும் இருந்தால் உண்மையிலே அவர் இறைவன் புறமிருந்து வந்தவரேயாவார் என நான் விளங்கியுள்ளேன்.

ஆனால் சந்தேகம் எனும் நோய் கொண்ட உள்ளத்தையுடையவர்கள் அதிலிருந்து விலக மட்டார்கள்
  (ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் நூல்: தஜலியாத்தே இலாஹிய்யா' என்ற நூலிலிருந்து...p-30)

No comments

Powered by Blogger.