சஅதுல்லாஹ் லூதியானவியின் அழிவு - ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களின் உண்மைக்கான ஒரு சான்று

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது காதியானி (அலை) அவர்களின் வாழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் அன்னாரின் உண்மைத்தன்மையை அறிந்து அவர்களை ஏற்றுக் கொண்டார்கள். அதே சமயம் பலர் அன்னாரை பல அடையாளங்கள் கண்டும் எதிர்த்து வந்தனர். அது மட்டுமல்லாமல் பல மௌலவிமார்கள் அன்னாருக்கு காஃபிர், தஜ்ஜால் போன்ற ஃபத்வாவை வழங்கி வந்தார்கள். அச்சயமயம் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் அவ்வாறான ஆலிம்களை முபாஹலாவிற்கு அழைப்பு விடுத்தார்கள். அன்னார் "அன்ஜாமே ஆத்தம் என்ற தமது நூலில் இவ்வாறு எழுதுகின்றார்கள்:

"இப்போது நான் எமது பேச்சை அசல் குறிக்கோளின் பக்கம் திருப்பியவாறு, எந்த மௌலவிமார்களை நான் முபாஹலாவிற்காக அழைத்தேனோ அவர்களின் பெயரை கீழே குறிப்பிடுகிறேன். மேலும் நான் இவர்கள் அனைவருக்கும் இறைவன் மீது ஆணையிட்டு கூறிக்கொள்கிறேன், அதாவது முபாஹலாவிற்காக தேதி மற்றும் இடத்தை நியமித்து விரைவில் முபாஹலாவிற்கு வரவும். அவர்கள் வரவும் இல்லை மேலும் காஃபிர் ஃபத்வா வழங்குவதிலிருந்தும், என்னை பொய்ப்படுத்துவதிலிருந்தும் விலகவில்லை என்றால் பிறகு இறைவனின் சாபத்தின் கீழ் வந்து அவர்கள் மரணம் அடைவார்கள்." 

(ரூஹானி கஜாயின் பாகம் 11 பக்கம் 68-69)

ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களை எந்த மௌலவிமார்கள் காஃபிர், தஜ்ஜால், பொய்யன் என்று கூறி வந்தார்களோ அவர்களின் பெயர் பட்டியல் அன்ஜாமே ஆத்தம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் சஅதுல்லாஹ் என்பவரின் பெயரும் பக்கம் 70 இல் முதல் வரிசையில் முதல் பெயராக எழுதப்பட்டுள்ளது. 

இந்த சஅதுல்லாஹ் என்பவர் யார் என்று சொன்னால் இவர் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களை மிகவும் கீழ்தரமாக கெட்ட வார்த்தையில் மிக அதிகமாக ஏசி பேசி வந்தார். இவர் லூதியானா நகரை சார்ந்தவர் ஆவார். இவர் அரபி மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தவர். இவர் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களுக்கு எதிராக மிக அதிக வெறுக்கத்தக்க, அசிங்கமான வார்த்தையை உபயோகித்து வந்தார்.

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் இவரின் அசிங்கமான பேச்சை பற்றி கூறும்போது இவ்வாறு கூறுகின்றார்கள்:

"எப்போது முன்ஷி சஅதுல்லாஹ் லூதியானவி அசிங்கமான பேச்சு மற்றும் வார்த்தைகளை கையாளுவதில் எல்லையை கடந்து விட்டாரோ. மேலும் தமது கவிதைகளில் எந்த அளவுக்கு அவர் கெட்ட வார்த்தைகளை கையாண்டுள்ளார் என்று சொன்னால் பஞ்சாபில் கெட்ட வார்த்தைகளை பேசும் அனைத்து எதிரிகளை விடவும் அவரின் அந்த கெட்ட வார்த்தைகள் முதல் இடத்தை பெற்றதாக இருந்தது."

(ஹக்கீகத்துல் வஹீ, ரூஹானி கஜாயின் பாகம் 22 பக்கம் 436)

அவர் "ஷஹாபே ஸாகிப் பர் மசீஹே காதிப்" என்ற நூலை எழுதி இருந்தார். அதன் பொருள் "அந்த பொய் மசீஹின் மீது நெருப்பு விழும்" என்பதாகும். அவர் தமது பாரசீக கவிதையில் ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களை குறித்து முன்னறிவிப்பு கூறினார். அதில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:

"இறைவன் புறமிருந்து உமக்காக நியமிக்கப்பட்டுவிட்டது அதாவது இறைவன் உம்மை பிடிப்பான் பிறகு உமது நாடி நரம்பை துண்டித்து விடுவான். அப்போது உமது மரணத்திற்கு பிறகு உமது இந்த இயக்கம் அழிந்து போகும். மேலும் சோதனைகள் வரத்தான் செய்யும் என்று நீங்கள் கூறி வருவதுண்டு. ஆனால் இறுதியிலோ மறுமையிலும் இவ்வுலகிலும் தீங்கிழைப்பவராக, ஏமாற்றம் அடைந்தவராக மரணம் அடைவீர்"

(ஹக்கீகத்துல் வஹீ, ரூஹானி கஜாயின் பாகம் 22 பக்கம் 448)

இதற்கு பிறகு "வலவ் தகவ்வல அலைனா" என்ற வசனத்தை எழுதி ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களை குறிப்பிட்டு கூறினான், "நீர் அனைத்து இடங்களிலும் இழிவடைவீர். மேலும் இந்த உலகத்திலும், அந்த உலகத்திலும் உமக்கு எவ்வித மரியாதையும் கிடைக்காது." 

இவ்வாறு சஅதுல்லாஹ் தமது கீழ்தரமான பேச்சில் எல்லையை மீறிக் கொண்டே சென்றார். இறுதியில் அவர் செப்டம்பர் 16, 1894 ஆம் ஆண்டு ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களை பற்றி எல்லை கடந்த தீய வார்த்தை மற்றும் அசுத்தமான எழுத்துக்களை அச்சிட்டு வெளியிட்டான். அதில் அவர் ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களை "அப்தர்" (அதாவது ஆண் சந்ததி அற்றவன்) என்று எழுதியிருந்தார் (நஊதுபில்லாஹ்). 

இவரின் இவ்வாறான பேச்சுக்களை, எழுத்துக்களை கண்டு ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் மிகவும் துக்கப்பட்டு, துயரப்பட்டு அல்லாஹ்வின் முன் அவரின் இவ்வாறான எச்சுப் பேச்சுக்களை வைத்து துஆ செய்தார்கள். அல்லாஹ் அன்னாரின் துஆவை ஏற்றவாறு சஅதுல்லாஹ்வை பற்றி அல்லாஹ் என்ன வெளிப்படுத்தினானோ அதனை ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் "அன்வாருல் இஸ்லாம்" என்ற தமது நூலில் எழுதியுள்ளார்கள். அதில் அன்னார் சஅதுல்லாஹ் லூதியானிவியை பற்றி இவ்வாறு கூறுகின்றார்கள்:

"உண்மையோடு நீ போரிட்டே வா. தமக்கு தாமே அழிவை பெற்று கொண்டவனே! உனது முடிவு என்னவாகும் என்பதை நீ காண்பாய். அல்லாஹ்வின் எதிரியே! நீ என்னுடன் அல்ல மாறாக இறைவனுடன் சண்டை போடுகிறாய். இறைவன்மீது ஆணையாக இதே நேரம் அதாவது செப்டம்பர் 29 1894 ஆம் ஆண்டு எனக்கு உன்னை பற்றி இவ்வாறு இல்ஹாம் வந்தது, "இன்ன ஷானியக்க ஹுவல் அப்தர்"

(அன்வாருல் இஸ்லாம், ரூஹானி கஜாயின் பாகம் 9 பக்கம் 85-86)

இந்த இல்ஹாமின் பொருள் என்னவென்றால், சஅதுல்லாஹ் நஊதுபில்லாஹ் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்களை அப்தர் என்று கூறினான். அவ்வாறு நிச்சயமாக நிகழாது மாறாக அவன்தான் அப்தர் ஆக ஆவான். 

இவ்வாறான நிகழ்வுகளுக்கு பிறகு ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்களுக்கு மூன்று ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் சஅதுல்லாஹ் லூதியானவின் வீட்டில் ஆண் குழந்தை பிறக்கவே இல்லை. அவனுக்கு ஏற்கனவே பிறந்த ஆண் குழந்தைகள் மரணம் அடைந்துவிட்டிருந்தன. இந்த வேதனையை அவன் தமது பாரசீக கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்தினான். அதன் பொருள் இவ்வாறாகும்:

"தேவையற்றவனே! நீ எனக்கு பிள்ளைகளை வழங்கினாய். ஆனால் அதில் சிலரை உன்பக்கம் அழைத்துக் கொண்டாய். இப்போது இதற்கு பதிலாக மேலும் நற்பிள்ளைகளை வழங்கி எனது மனதை மகிழ்வூட்டுவாயாக. மேலும் உனது பரிவுடன் என்னை துக்கம் மற்றும் துயரத்திலிருந்து விடுவிப்பாயாக. விசுவாசமுள்ளவனே! எனது மனைவி மக்களை எனது கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடியதாக ஆக்குவாயாக. மரணம் அடைந்த எனது பிள்ளைகளின் பிரிவினால் எனது உள்ளம் துக்கம் மற்றும் துயரத்தினால் நொறுங்கி போயின."

(ஹக்கீகத்துல் வஹீ, ரூஹானி கஜாயின் பாகம் 22 பக்கம் 449)

இந்த கவிதைகளை குறிப்பிட்டு ஹஸ்ரத் அஹ்மது அலை அவர்கள் கூறினார்கள்:

"இவ்வாறான வேதனைமிகு கவிதைகளை கண்டு குழந்தைகள் இல்லாது அல்லது மரணம் அடைந்து போவதனால் எந்த அளவுக்கு மன வேதனை அவரது உள்ளத்தில் நிறைந்திருந்தன என்பதை ஒவ்வொருவராலும் நினைத்து பார்க்க முடியும். அதிலிருந்து அவரால் மீள முடியவில்லை. 16 வருஷமாக தமது அதிக குழந்தைகளுக்காக துஆக்களை செய்து வந்தார் என்பது அவரது நூலிலிருந்து தெரியவருகிறது. இறுதியில் அவர் ஜனவரி 1907 ஆம் ஆண்டின் முதல் வாரத்திலே அந்த அனைத்து துஆக்களிலும் தோல்வியுற்றவராக ஏமாற்றம் அடைந்தவராக சில மணி நேரங்களில் லூதியானாவில் பிளேக் நோயினால் மரணம் அடைந்தார். மேலும் எனது வாழ்விலேயே அவரது மரணம் நிகழ்ந்துவிடுவதை அவர் விரும்பாதவராக இருந்தார். மாறாக அவரது வாழ்விலேயே எனது மரணம் வந்துவிட வேண்டும் என்பதை விரும்பினார். இது சம்பந்தமாக அவர் முன்னறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். மேலும் எனக்கு பிள்ளைகள் பிறக்க வேண்டும், எனது ஜமாஅத் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதை அவர் விரும்பியதில்லை. தமக்கு அதிக பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்று விரும்பினார். மேலும் எனது இயக்கத்திற்கு யாரும் உதவிட அவர் விரும்பியதில்லை. ஆனால் இவ்வனைத்து ஏக்கங்களுடன் ஏமாற்றம் அடைந்தவராக அவரின் எந்த குறிக்கோளும் நிறைவேறவில்லையே என்ற இழிவுடன் அவர் மரணம் அடைந்தார்."

(ஹக்கீகத்துல் வஹீ, ரூஹானி கஜாயின் பாகம் 22 பக்கம் 449-450)

சஅதுல்லாஹ் இழிவுடன் ஏமாற்றத்துடன் மரணம் அடைவார் என்ற ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்களின் முன்னறிவிப்பானது அன்னாரின் நூலாகிய அன்ஜாமே ஆத்தமில் அரபி கவிதை வரிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனின் ஒரு வரி இவ்வாறு வருகிறது:

انی اراک تَمِیۡسُ بِالۡخُیَلَاءِ

أنسیت یوم الطعنۃ النجلَاءِ

அதாவது, "நீ இறுமாப்புடன் செல்கிறாய் என்பதை நான் பார்க்கிறேன். நீ பிளேக் நோயினால் மரணம் அடைவாய் என்ற அந்த நாள் உனக்கு நியாபகம் வருவதில்லையா"

இந்த கவிதை வரிகளில் சஅதுல்லாஹ் பிளேக் நோயினால் மரணம் அடைவான் என்பதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

ஹஸ்ரத் அஹ்மது (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:

"طعنۃ என்ற சொல்லானது பிளேக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் نجلاء அரபி மொழியில் அகலமான காயத்திற்கு கூறப்படுகிறது. மேலும் பிளேக்கிற்கும் இதே நிலைதான் தென்படுகிறது. அதாவது நுரையீரல் காயம் அடைந்து வெடித்து விடுகின்றன. மேலும் அதில் அகலமான காயம் ஏற்பட்டு விடுகின்றன. ஆச்சரியத்திற்குரிய விஷயம் என்னவென்றால், எந்த காலத்தில் இந்த முன்னறிவிப்பு செய்யப்பட்டதோ அதே காலத்தில் இந்த நாட்டில் பிளேக்கிற்கான அறிகுறியே இல்லை. ஆக, இது அனைத்தையும் அறியக்கூடிய வல்லமை பெற்ற அவனின் மிக ஆழிய ஞானத்தின் ஓர் உதாரணமாகும். அதாவது அவன் (இறைவன்) சஅதுல்லாஹ்வின் மரணத்தை பற்றி எந்த நேரத்தில் அறிவித்தான் என்றால் அப்போது நாடு பிளேக்கிலிருந்து தூய்மையானதாக இருந்தது. 

.....சஅதுல்லாஹ் என்னை பற்றியும் மேலும் எனது ஜமாஅத்தின் அனைத்து நபர்களும் முர்த்தது ஆகி பிரிந்து சென்று விடுவார்கள் என்றும் "ஷஹாபே ஸாகிப்" என்ற தமது நூலில் அச்சிட்டு வெளியிட்டார். அதில் அவர் மிகத் தெளிவாக இவ்வாறு எழுதியுள்ளார் அதாவது இவர் (அதாவது ஹஸ்ரத் அஹ்மது அலை) பொய்யர், இட்டுக்கட்டுபவர் ஆவார் ஆகவே இவர் இழிவான மரணத்தை அடைவார். மேலும் அவரது ஜமாஅத் தனித்தனியாக பிரிந்துபோய்விடும். அவர் (அதாவது சஅதுல்லாஹ்) மிக அதிக கெட்ட வார்த்தைகளுடன் எனது அழிவை பற்றி அறிவித்தார். ஆதலால் நேர்மையாளர்களுக்காக வெளிப்படும் இறைவனின் ரோஷமானது அவரது முன்னறிவிப்பை அவர் பக்கமே திருப்பி விட்டது."

(ஹக்கீகத்துல் வஹீ, ரூஹனி கஜாயின் பாகம் 22 பக்கம் 447-448)


ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் அலை அவர்கள் கூறுகிறார்கள் : 

"இது விநோதமான விஷயம். அதாவது, இவர்களின் சிந்தனையில் பொய்யனாகவும் இட்டுக்கட்டுபவனாகவும் தஜ்ஜாலாகவும் நான் இருக்கிறேன். ஆனால், அறைகூவலின் போது இவர்களே மரணிக்கின்றனர். இந்த ரகசியத்தை யாரும் புரிய முடியுமா? நவூதுபில்லாஹ்! இறைவனுக்கும் தவறான புரிதல் ஏற்படுமா? இத்தகைய நன்மக்கள் மீது ஏன் இறை தண்டனை இறங்குகிறது? மரணமும் ஏற்படுகிறது? பிறகு, இழிவும் கேவலமும் ஏற்படுகிறது?"

(ஹகீக்கத்துல் வஹி, ரூஹானி கஸாயின் தொகுதி 22, பக்கம் 238)


என்னைப் போன்று மீண்டும் மீண்டும் உதவி செய்யப்பட்ட

பொய்யர் யாரும் உலகில் உதாரணமாக இருந்தால் கொண்டு வாருங்கள் மக்களே!


No comments

Powered by Blogger.