ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் ஹஜ் ஏன் செய்யவில்லை?
அஹ்மதி அல்லாதவர்களில் சிலர் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தில்
தோன்றக்கூடிய வாக்களிக்கப்பட்ட மஸீஹ் தொடர்பாக அவர் ஹஜ், உம்ரா மற்றும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
ரவ்லா முபாரக் (அருளுக்குரிய கல்லறைய)இல் வருகை தந்து ஸலாம் கூறுவார்கள் என்று ஹதீஸில்
வந்துள்ளதே ஆனால் நீங்கள் கூறும் வாக்களிக்கப்பட்ட மஸீஹோ (அலை) ஹஜ்ஜோ,
உம்ராவோ அல்லது ரவ்லா ஷரீஃபின்
ஸியாரத்தோ ஏதும் செய்யவில்லையே பிறகு எவ்வாறு இவர் உண்மையான இமாம் மஹ்தியாக வாக்களிக்கப்பட்ட
மஸீஹாக இருக்க முடியும்? என்று ஆட்சேபனை ஹஸ்ரத்
மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் மீது செய்கின்றனர்.
நமது பதில்: ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹாக தோன்றிய மிர்ஸா
குலாம் அஹ்மத் (அலை) அவர்களே இந்த ஆட்சேபனைக்கான பதிலை இவ்வாறு கூறுகிறார்கள்:
"ஹஜ் தடை செய்யப்படுவதற்கான காரணம் வெறும் பயணம்
மட்டுமல்ல. மாறாக ஹஜ் செய்யாமல் இருப்பதற்கான தகுந்த, ஆகுமான பல காரணங்கள் அல்லாஹ்வின் பார்வையில் உள்ளன.
அவ்வாறான காரணங்களில் உடல்நிலை பாதிப்பு ஏற்படுதல், ஹஜ் செய்வதற்காக செல்கின்ற வழியிலும், மக்காவிலும் அமைதியான சூழல் நிலவ வேண்டும் என்பதுமாகும்.
அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
"உங்களில் எவர் ஹஜ் செய்வதற்கான வாய்ப்பை பெற்றுள்ளீர்களோ
அதற்கான பயணத்தை மேற்கொள்ளவும். (3:95)
மிகவும் வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், ஒரு புறம் தீய விளைவை ஏற்படுத்தும் இந்த உலமாக்கள்
(ஆலிம்கள்) மக்காவிலிருந்து
எனக்கெதிராக 'இவர் காஃபிர்'
என்ற ஃபத்வாவை (மார்க்க தீர்ப்பை)
வாங்கி வருகிறார்கள். மறுபுறம் நீங்கள் ஹஜ் செல்லுங்கள் என்றும் கூறுகின்றார்கள்! மக்காவாசிகள்
காஃபிர் என்று ஃபத்வா வழங்கிய பின் மக்கா நகரமே
குழப்பம் நிறைந்த இடமாக மாறிவிட்டது. எங்கு குழப்பம் மற்றும் கிளர்ச்சி உருவாகி உள்ளதோ
அங்கு செல்ல வேண்டாம் என்றும் இறைவன் கூறுகின்றான். ஆக இது எப்படிப்பட்ட ஆட்சேபனை என்று
எனக்கு புரியவில்லை. குழப்பம் நாட்களில் ஒருபோதும் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும்
ஹஜ் செய்யவில்லை.
மேலும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து குழப்பம் நிறைந்த சூழலிலிருந்து
தவிர்ந்து கொள்ள வேண்டும் நிருபணமாகி உள்ளதை இந்த ஆலிம்களும் நன்றாக அறிந்த ஒன்றுதான்.
மாக்கவாசிகளிடம் நம்மை காஃபிர் என்று பிரகடனம் செய்து விட்டு பிறகு மீண்டும் மீண்டும்
ஹஜ் செல்லுங்கள் என்று கூறும் இவர்களின் கூற்று எந்த அளவுக்கு தீயசெயலாக உள்ளது. (நஊதுபில்லாஹ்
மின் ஷூரூரிஹிம்) நாம் ஹஜ் செய்வது குறித்து
இவர்களுக்கு ஏன் கவலை ஏற்பட்டுள்ளது என்பதை சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
என் தொடர்பாக அவர்களுடைய (ஆலிம்களுடைய) உள்ளத்தில்,
'நாம் மக்காவிற்கு சென்ற பிறகு
நமக்கு பின்னால் சியல் தீயவர்களை மக்காவிற்கு அனுப்பி அவர்கள் மூலமாக இவர் காஃபிர்
என்றும் இவர் கொலை செய்யப்பட வேண்டும் என்றும் மக்களிடையில் ஒரு விதமான கூச்சலிட்டு
குழப்பமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர வேறு எதுவும் இருக்க
முடியுமா?
ஆகவே காலம், சூழ்நிலை மற்றும் இறை கட்டளைக்கிணங்க இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
பொருட்படுத்தாமல் விட முடியாது. இதற்கு முன்பு ஷரியத்திற்கு கட்டுப்படுவது அவசியமாகும்.
குழப்பம் தோன்றக்கூடிய இடங்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வது நபிமார்களின் சுன்னத்
(நடைமுறை) ஆகும்.
மக்காவிலுள்ள ஆட்சி அதிகாரம் (இங்கு இந்தியாவில்) காஃபிர் ஃபத்வா கொடுப்பவர்களின்
ஒத்தக் கொள்கையை கொண்டவர்களிடமே உள்ளது. இங்கு இவர்கள் எம்மை நோக்கி இவர் கொலை செய்ய்ப்பட
வேண்டும் என்று ஃபத்வா கொடுக்கும்போது அங்குள்ளவர்கள் எம்மை துன்புறுத்துவதிலிருந்து
விலகி இருக்க முடியுமோ!? அல்லாஹ் கூறுகின்றான்:
وَلَا تُلْقُوْ ا بِاَیْدِیْکُمْ اِلَی
التَّھْلُکَةِ
பொருள்: நீங்கள் உங்கள் கைகளாலேயே
(உங்களை) அழிவிற்கு ஆளாக்கிக் கொள்ளாதீர்கள். . (2:196)
இதன் அடிப்படையில் கண்முன்னே
தெரியக்கூடிய அழிவில் நம்மை இட்டுக் கொண்டு ஹஜ்ஜுக்கு செல்வதாக இருந்தால் நாம்
பாவியாக ஆகிவிடுவோம். ஹஜ் செய்ய வேண்டுமென்றால் அதற்கென்று பல நிபந்தனைகள் உள்ளது.
ஆனால் குழப்பம் மற்றும் அழிவிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பது எவ்வாறான பூரண
கட்டளை என்றால் அதற்கான எந்த நிபந்தனையும் இல்லை. தற்போது நீங்களே சுயமாக சிந்தியுங்கள், திருக்குர்ஆனின்
பரிபூரண கட்டளையை பின்பற்ற வேண்டுமா அல்லது நிபந்தனையுள்ள கட்டளையை நிபந்தனையிருப்பது
கண்டறிந்தும் பின்பற்ற வேண்டுமா?
(அய்யாமே சுல்ஹ் –
ரூஹானி கஸாயீன் பாகம் 14 பக்கம் 415-416)
மற்றொரு இடத்தில் இவ்வாறு கூறுகின்றார்கள்:
“இந்த மக்கள் குறும்புத் தனமாக தீய எண்ணத்துடன்
இவ்வாறு ஆட்சேபனை செய்கிறார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து ஆண்டுகள்
மதீனாவில் இருந்தார்கள். மக்கா மற்றும் மதீனாவிற்கு இடையில் இரண்டு நாள் பயண தூரம்
மட்டும்தான் இருந்தது. அப்படி இருந்தும் கூட ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து
வருடத்தில் எந்த ஒரு ஹஜ்ஜும் மேற்கொள்ளவில்லை. பயணத்திற்கான சவாரி குதிரை போன்றவற்றிற்கான
ஏற்பாடும் செய்திருக்க முடியும். ஆனால் மனிதனிடம் போதுமான செல்வம் மட்டும் இருந்தால்
போதாது மாறாக எந்தவொரு கிளர்ச்சியும் குழப்பமும் நிலவாமல் அச்சமற்ற அமைதியான சூழ்நிலை
இருக்க வேண்டும் என்பதும் அவசியமான நிபந்தனை ஆகும். அமைதி நிறைந்த சூழலில் அங்கு சென்று
ஹஜ் செய்வதற்கான வழி வகைகள் இருக்க வேண்டும். மிருகத்தனமான இயல்பினை கொண்ட உலமாக்கள்
இங்கு நாம் கொலை செய்யப்பட வேண்டும் என்று நம் மீது ஃபத்வா கொடுக்கின்றார்கள். அரசாங்கத்தைப்
பற்றிய அச்சமும் அவர்களுக்கு இல்லை. அங்கு இவர்கள் என்ன செய்வார்கள் என யாருக்கு தெரியும்.
நாம் ஹஜ் செய்யவில்லை என்பதில் இவர்களுக்கு என்ன நேர்ந்துவிட்டது? நாம்
ஹஜ் செய்தால் இவர்கள் நம்மை முஸ்லிம் என்று ஏற்றுக் கொள்வார்களா? நம்முடைய ஜமாத்தில் இணைந்து விடுவார்களா? அப்படி என்றால்
(என்னை எதிர்க்கின்ற) இந்த அனைத்து ஆலிம்களும் ஒரு ஒப்புதல் மடலில் நாம் ஹஜ்ஜு செய்துவிட்டு
வந்தால் அனைவரும் நம்முடைய கையில் தவ்பா செய்து நம்முடைய ஜமாஅத்தில் இணைந்து விடுவோம்
என்றும் நம்முடைய கொள்கையை பின்பற்றக் கூடியவர்களாக மாறி விடுவோம் என்றும் எழுதி கொடுக்க
வேண்டும். இவ்வாறு அவர்கள் எழுதி கொடுத்து அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் நாம்
ஹஜ் செய்து வருவோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்காக ஹஜ் செய்வதற்கான அனைத்து வழிமுறைகளையும்
எளிதாக்கி வைப்பான்.
இவ்வாறு செய்வதின் மூலம் முல்லாக்களின்
குழப்பமும் விலகிவிடும். எந்தவொரு நியாமுமில்லாமல் முறைகேடாக ஆட்சேபனை செய்வது தவறாகும்.
இவ்வாறு செய்வதனால் இந்த ஆட்சேபனைகளும், அவதூறுகளும் நம்மீது எழுவதல்ல மாறாக ஹஸ்ரத்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது எழக்கூடியதாக இருக்கிறது. ஏனென்றால் ஹஸ்ரத் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களும் கடைசி வருடத்தில்தான் ஹஜ் செய்தார்கள்.
(மல்ஃபூஸாத் பாகம்
5 பக்கம் 248)
ஹஜ்ஜே பதல்:
ஹஜ்ஜே பதல் என்றால் ஒருவர் ஹஜ் செய்வதற்கான
ஆசை கொண்டு அவருக்கு அதற்கான பாக்கியம் கிடைக்கவில்லை என்றால் அந்த நபருக்கு பதிலாக
மற்றொருவர் ஹஜ் செய்வதற்கே ஹஜ்ஜே பதல் என்பர். இது ஹதீஸிலிருந்தும் நிரூபணமாகிறது.
ஒரு முறை ஒரு சஹாபி ஹஸ்ரத் நபி (ஸல்) அவர்களிடம் எனது தந்தை முடியாமல் இருக்கிறார்.
அவரால் ஒட்டகத்தின் மீது ஏதும் சாய்வதற்கு துணையின்றி பயணிக்க முடிவதில்லை என்று கூறியதும்
அவருக்கு பதிலாக நீர் ஹஜ் செய்யும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்
| முஸ்லிம் கிதாபுல் ஹஜ்)
இந்த ஹதீஸின் அடிப்படையில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட
மஸீஹ் (அலை) அவர்களுக்கு ஹஜ் செய்வதற்கான ஆசை இருந்ததின் காரணத்தினால் ஹஜ்ஜே பதல் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்கள் தரப்பில் ஹஸ்ரத் ஹாஃபிஸ்
அஹ்மதுல்லாஹ் ஸாஹிப் (ரலி) ஹஜ்ஜே பதல் மேற்கொண்டார்கள்.
(மொழியாக்கம் மௌலவி அபுல் ஹஸன் சாஹிப்)
இந்த Source உருது மொழியில் உள்ளது. எடுக்கப்பட்ட இடம் கீழே
http://www.askahmadiyyat.org/questions/allegation-of-not-performing-the-pilgrimage/answer-of-not-performing-pilgrimage/
Post a Comment