ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி (அலை) ஆங்கிலேயேர்களின் கைக்கூலி இல்லை என்பதற்கு மற்றுமொரு சான்று

ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபதுல் மசீஹ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: ஒரு முறை ஒரு நாய் எங்களுடைய வீட்டின் கதவருகே வந்தது. நான் அங்கு நின்று கொண்டிருந்தேன். அறைக்குள் ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை) அவர்கள் மட்டுமே இருந்தார்கள். நான் அந்த நாயைப் பார்த்து திப்பு, திப்பு என்று கூறினேன். ஹஸ்ரத் சாஹிப் மிகவும் கோபத்துடன் வெளியே வந்து , உனக்கு வெட்கம் இல்லையா? ஆங்கிலேயர்கள் பகைமையின் காரணமாக ஒரு உண்மையான முஸ்லிமின் பெயரை (அதாவது திப்பு சுல்தான் அவர்களின் பெயரை) தன்னுடைய நாயின் பெயராக வைத்தார்கள். மேலும் நீங்கள் நாயைப் பார்த்து அவர்கள் வைத்த பெயரையே கூறி அழைக்கின்றீர்கள். இனி இவ்வாறு செய்யக்கூடாது என்று நான் எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள்.


எழுதுகின்றார்கள், எனக்கு அப்போது வயது 8 அல்லது 9 ஆக இருக்கும். அந்த நாள் தான் என்னுடைய உள்ளத்தில் திப்பு சுல்தானுடைய கண்ணியம் ஏற்பட்டது. நான் சுல்தான் திப்புவின் தியாகங்கள் வீணாகவில்லை என்பதை உணர்ந்தேன். இறைவன் அவருடைய பெயரை எந்த அளவு கண்ணியப்படுத்தினான் என்றால் இறைவனால் அனுப்பப்பட்டவர், காலத்தின் இமாம் அவரை கன்னியப்படுத்துகின்றார். அவருக்காக ரோஷத்தை வெளிப்படுத்துகிறார். மேலும் அன்னார் (அதாவது ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபதுல் மசீஹ் (ரலி)) எழுதுகின்றார்கள்,  இந்த சம்பவத்திலிருந்து எங்கு குழந்தையின் எந்த ஒரு செயலையும் பாகுபாடின்றி சகித்துக் கொள்வது என்பது சரியானது அல்ல என்ற விஷயம் புலனாகின்றதோ அங்கு ஹஸ்ரத் சாஹிபின் எல்லையற்ற மார்க்க மற்றும் சமுதாயத்தின் மீதுள்ள பற்றும் நமக்கு தென்படுகிறது.

அந்த குழந்தை அன்னார் (அதாவது ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் (அலை)) முயற்ச்சி செய்து எழுதிய விலை மதிப்பற்ற பக்கங்களை அதற்காக அவர்கள் எவ்வளவு மணி நேரத்தையும் இரவையும் செலவழித்தார்கள் என்பதை இறைவனே நன்கறிவான். எரித்து சாம்பலாக்கி விட்டது. அவனுடைய இந்த செயலை அன்னார் பொருத்துக் கொண்டார்கள். இதன் விளைவாக மீண்டும் அவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை அவர்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அன்னார் ஆதாரமாக கூறக்கூடிய இச்சம்பவம் ஒரு முறை ஹஸ்ரத் இரண்டாவது கலீஃபதுல் மசீஹ் (ரலி) அவர்கள் விளையாட்டுத்தனமாக ஹஸ்ரத் சாஹிபின் நூற்களின் முழுப் பக்கங்களை எரித்து விட்டார்கள். ஆனால் இந்த விஷயத்தில் ஹஸ்ரத் சாஹிப் அவர்கள் எதுவுமே கூறவில்லை. அன்னார் கூறுகின்றார்கள். இதை ஹஸ்ரத் சாஹிப் பொருத்திக் கொண்டார்கள். ஆனால் ஒரு சமுதாய தலைவரை அவமதிக்கும் செயலை அன்னாரால் பொருத்துக் கொள்ள இயலவில்லை. கூறினார்கள், ஒரு சமுதாய முஸ்லிம் தலைவர் மார்க்க பற்றின் காரணமாக ஷஹீதானார். அவருக்கு இஸ்லாத்துடனான தொடர்பேயன்றி வேறெந்த தொடர்பும் இல்லை. அவருடைய பெயரை ஒரு குழந்தை அறியாமையினால் கூறிய காரணத்தினால் அவருக்கு அவப்பெயர் ஏற்படுகின்றது. இதை அன்னாரால் பொருத்துக் கொள்ள இயலவில்லை.

இந்த சம்பவத்திலிருந்து ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மசீஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் ஆங்கிலேயேரின் கைக்கூலி என்று ஆட்சேபனை செய்கின்றவர்களுக்கு ஒரு படிப்பினை இருக்கின்றது. ஆங்கிலேயேர்களின் முன் தலை குனிவதற்கு பகரமாக ஆண்மகனைப் போல் தன்னுடைய வாழ்க்கையை அர்பணித்ததன் காரணமாகவே சுல்தான் ஃபதஹ் அலி திப்புவிற்கு சமுதாயப் பற்றின் காரணமாகவே கண்ணியம் கொடுத்தார்கள். இது போன்ற ரோஷம் கொண்ட மனிதர் தொடர்பாக அவர் அந்நிய சமுதாயத்தின் கைக்கூலி என்ற சந்தேகத்தைக் கூட உள்ளத்தில் எவ்வாறு கொண்டு வர இயலும்?

(ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் ஐந்தாவது கலீஃபதுல் மசீஹ் (அய்யதஹுல்லாஹுத் தஆலா....) அவர்கள் 24.10.14 அன்று ஆற்றிய ஜுமுஆ குத்பா சொற்பொழிவிலிருந்து...) முழு குத்பாவை ஆடியோவாக கேட்க:
http://www.alislam.org/tamil/av/FSA20141024-TA.mp3

வீடியோவாக பார்க்க:
http://www.youtube.com/watch?v=GAfXEXygmTE



No comments

Powered by Blogger.